வவுனியாவில் காலாவதியான யோக்கட்களை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றம் 10 000 ரூபாய் அபராதம்!!

694

vavuniya_court

வவுனியாவில் காலாவதியான யோக்கட்களை வியாபார நிலையத்திற்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்றபோது வாகனத்தை சோதனையிட்ட வவுனியா பொது சுகாதார பரிசோகர்கள், காலாவதியான யோகட்டை விநியோகம் செய்ய முயன்றவரை வவுனியா மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ரூபா பத்தாயிரம் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து கூலர் வாகனத்தில் யோகட் வியாபார நிலையங்களுக்கு விநியோகம் மேற்கொள்ள முயன்றபோது வவுனியா பிரதான வீதியில் குறித்த கூலர் வாகனத்தை இடைமறித்த வவுனியா பொது சுகாதார பரிசேதகர்கள் வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது காலாவதியான 29 கப் யோகட்களை கூலருக்குள் வைத்து விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்து வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றல் நேற்று முற்படுத்தியபோது நீதவான் ரூபா பத்தாயிரம் தண்டமாக செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

காலாவதியான யோகட்களை சேகரித்து பாதுகாப்பான பெட்டியில் காலாவதியான பொருட்கள் என்று எழுதி வைத்திருக்கவேண்டும் என்று ஏற்கனவே அறிவறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் அதற்கு அமைவாக நடந்து கொள்ளாமல் 29 யோகட் கப்பினை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்யும் நோக்கிலே வைத்திருந்தாக தெரிவித்து இவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

காலாவதியான யோகட்டினை குறித்த நிறுவனம் திரும்பப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.