அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி வயல் பிரதேசத்தில் நேற்று இரவு வயலில் காவல் புரிந்து கொண்டிருந்த விவசாயி ஒருவரை யானை தாக்கியதில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் சம்மாந்துறை, 90ஏ, மலையடி வீதியைச் சேர்ந்த கலந்தர் பர்ஹான் (32) என்பவராவார். இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






