உலகின் மிகப்பெரிய விமானத்திற்க்கு நடந்த கதி!!

935

southbedsnews agency- luton.. (fairlys)

இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.

உலகின் மிகப்பெரிய விமானம் இன்று சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானம் டெலிபோன் கம்பத்தில் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய இந்த விமானத்தின் சோதனை வெள்ளோட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்படுவதற்கு மட்டும் இந்த விமானத்தில் ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது.

இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்தைவிட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.