கடந்த காலங்களில் உலக அழிவு தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என மாயா நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டு வந்தன.
அது தோல்வியடைந்த பின்னர் தற்போது மற்றுமொரு உலக அழிவு தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தற்போது நிபரு எனப்படும் கிரகம் சூரிய மண்டலத்தில் சுதந்திரமாகத் திரிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த கிரகம் எதிர்வரும் மாதம் பூமியுடன் மோதும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் பல சந்தரப்பங்களில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வான்பரப்பில் ஊதா நிரத்திலான சந்திரனுக்கு ஒத்த மர்மமான பொருள் தோன்றியது.
இந்த மர்மபொருள் சந்நிரன் மற்றும் சூரியன் தோன்றிய சந்தர்ப்பங்களில் உட்பட வானில் பாரிய காட்சியாக காணப்பட்டுள்ளன. இந்த பொருள் நிபரு எனப்படும் கிரகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கிரகம் அடுத்து மாதங்களில் பூமியின் மீது மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






