வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் பிரித்தானியாவில் தற்கொலை!!

680

Dead

பிரித்தானியாவில் மலையில் இருந்து குதித்து தமிழ் இளைஞர் ஒருவர் பளியகியுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .

வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் பிரித்தானியாவிற்கு சென்று 06 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் உளைச்சலில் சிக்கித் தவித்த நிலையில் இந்த தற்கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட இவரது உடல் மரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

குறித்த இளைஞனின் தற்கொலை தொடர்பாக பொலிசார் விசாரணைளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இவருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்து பத்து நாட்களேயான நிலையில் இவரது தற்கொலை அவரது மனைவியை கடுமையாகப் பாதித்துள்ளது.

இருபத்தி ஏழு வயதுடைய இந்த இளைஞனின் தற்கொலை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 2