ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 21 பேர் பலி!!

530

Nepal

நேபாளத்தில் ரயுதாகத் மாவட்டம் பொகாராவில் உள்ள கயுர் என்ற இடத்தில் இருந்து பயணிகள் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் சித்வான் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி ரோட்டில் இருந்து 100 மீட்டர் ஆழத்தில் ஓடும் திரிசுலி ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.

அதற்குள் பஸ்சில் இருந்த 21 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர். விபத்துக்குரிய காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.