கொழும்பு புஞ்சி பொரள்ளை பகுதியில் இயங்கி வந்த இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இந்த அலுவலகம் பத்தரமுல்லையில் உள்ள சுஹூருபாய கட்டிடத்தில் இயங்கவுள்ளது.
இதன் காரணமாக இலக்கம் 10 புஞ்சி பொரள்ளை ஆனந்த ராஜகருண மாவத்தையில் இயங்கிய திணைக்களத்தின் அலுவலகம் இன்று முதல் மூடப்பட உள்ளது.






