பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த ஐவரில் நால்வர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நால்வரில் மூவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களென்றும் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மற்றைய இளைஞர் லண்டனில் பிறந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்கள் ஐவரும் 19 முதல் 26 வயதிற்குட்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.
நெருங்கிய நண்பர்களான இவர்கள், வருடத்தின் உஷ்ணம் அதிகமான தினம் என பிரித்தானியாவில் வர்ணிக்கப்படும் நாளில் பொழுதுபோக்கிற்காக கெம்பர் சேண்ட்ஸ் பகுதிக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
நிதர்ஷன் ரவி, இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராசா, கோபி நாதன், கெனிகன் நாதன் மற்றும் குருஷாந்த் ஶ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் இந்த இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சகோதரர் பிரித்தானிய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் நேற்றைய தினம் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பொழுதுபோக்கிற்காகக் கூடியிருந்தார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த இளைஞர்கள் கடலில் மூழ்கிய அதே இடத்தில் கடந்த மாதம் 19 வயதான இளைஞர் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை லண்டனில் நடத்துவதற்கு, அங்குள்ள அவர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.
நிதர்ஷன் ரவி
கோபி நாதன்
கெனிகன் நாதன்
இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராசா
குருஷாந்த் ஶ்ரீதவராஜா
படங்கள்: பேஸ்புக்











