3வது ஒருநாள் போட்டிக்கான அனைத்து டிக்கட்டுக்களும் விற்றுத் தீர்க்கப்பட்டன!!

523

SL

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கட்டுக்கள் யாவும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தப் போட்டி நாளை ஞாயிற்றுக் கிழமை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை இரு அணிகளுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது போட்டிக்கான அனைத்து டிக்கட்டுக்களும் விற்றுத் தீர்க்கப்பட்டுவிட்டதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.