வியட்நாமியப் பெண்ணொருவர் மோசடியான முறையில் காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காக தனது கையையும் காலையும் வெட்டிக் கொண்டுள்ளார்.
வியட்நாம் தலைநகர் ஹனோயைச் சேர்ந்த இப் பெண் எல்.டி.என். என்ற முதலெழுத்துக்களால் மாத்திரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த மே மாதம் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் கையொன்றில் மூன்றில் ஒரு பங்கும் கால் ஒன்றில் மூன்றில் ஒரு பங்கும் துண்டிக்கப்பட்டிருந்தன. இக் கையையும் காலையும் மீண்டும் பொருத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தான் ரயில் விபத்தொன்றில் காயமடைந்ததாக வும் தனது நண்பர் ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும் பொலிஸாரிடம் அப் பெண் தெரிவித்தார்.
இதையடுத்து சுமார் 130,000 அமெரிக்க டொலர் காப்புறுதி இழப்பீட்டுக்கு அவர் விண்ணப்பித்தார். ஆனால், அவர் தனது கையையும் காலையும் நண்பர் ஒருவர் மூலம் வெட்டித் துண்டித்துள்ளார் என்பதை அதிகாரிகள் கண்டறிந் தனர் என வியட்நாம் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.






