வவுனியாவை வந்தடைந்த நல்லிணக்கத்திற்கான ஒலிம்பிக் தீபம்!!

582

 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று 26.08.2016 காலை புறப்பட்ட ‘நல்லிணக்கத்திற்கான’ ஒலிம்பிக் தீபம் வவுனியாவில் பம்பமடுவில் அமைந்துள்ள யாழ் வவுனியா வளாகத்தை மாலை 2.00 மணியளவில் வந்தடைந்தது.

தேசியக் கொடி ஏற்றலுடன் ஒலிம்பிக் தீபத்தை பொறுப்பேற்ற வவுனியா வளாக மாணவர்கள் வவுனியா மன்னார் வீதி வழியாக வவுனியா பொதுவைத்தியசாலையை வந்தடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக ஒலிம்பிக்தீபம் நடைபவனியாக வவுனியா பேருந்து நிலையத்தை வந்தடைந்து பின் அங்கிருந்து நேற்று மாலை 5.00 மணிக்கு இரஜரட்டை பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒலிம்பிக் தீபம் இன்று கிழக்கு மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதுடன் பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடனும் இந்த ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் 01 ம் திகதி தொடக்கம் 13 ம் திகதி வரை வயம்ப பல்கலைக்கழகத்தில் விளையாட்டுக்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 ccccc cccccc IMG_7649 IMG_7655 IMG_7658 IMG_7659