வவுனியா பூந்தோட்டம்-ஸ்ரீநகர் துர்க்கையம்மன் ஆயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்கள் இன்று(28.08.2016) சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பமாவதற்கு முன்னிட்டு ஸ்ரீநகர் துர்க்கையம்மன் ஆலயத்திலிருந்து பூந்தோட்டம் சந்திவரையான பகுதி லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்களால் துப்பரவு செய்யப்பட்டது.
இவ்வாறு பிரதேச இளைஞர்கள் தாமாக முன்வந்து சிரமதானப் பணியில் ஈடுபடுவதை பார்த்த பிரதேச மக்கள் இவ் இளைஞர்களின் முயற்சியை பாராட்டிச் சென்றதை காணமுடிந்தது.


















