ஷாரூகானுக்கு காலணி தயாரித்த பாகிஸ்தான் இரசிகர் கைது!!

420

Shahrukh

ஷாருக்கானுக்கு மான் தோலில் காலணி தயாரித்த பாகிஸ்தான் இரசிகர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் உறவினர் தங்கியுள்ளார். அவர் ஷாருக்கானுக்கு புகழ் பெற்ற பெஷாவர் காலணியை பரிசளிக்க முடிவு செய்தார்.

அதற்காக காலணி தயாரிப்பாளர் ஜகாங்கீர்கான் என்பவரை சந்தித்து இரண்டு ஜோடி காலணிக்கள் தயாரித்து தரும்படி கேட்டார். ஷாருக்கானுக்கு ‘காலணி’ ஆர்டர் கொடுத்ததை அறிந்த ஜகாங்கீர்கான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் ஷாருக்கானின் தீவிர இரசிகர் ஆவார்.

இவர் ஷாருக்கானுக்கு விசே‌ஷமாக மான்தோலில் ‘காலணி’ தயாரித்தார். இதை அறிந்த பொலிசார் ஜகாங்கீர் கானின் தொழிற்சாலையை சோதனை நடத்தினர்.

அங்கு மான்தோலில் தயாரிக்கப்பட்ட ‘காலணி’ இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். கொல்லப்பட்ட வன விலங்குகளின் தோலில் இருந்து செருப்புகள் முதலான பொருட்கள் தயாரிப்பது குற்றமாகும்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜகாங்கீர்கானுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.