கீரை பறிக்கச் சென்ற குடும்பஸ்தத்தர் சடலமாக மீட்பு!!

538

D1

பொகவந்தலாவ – தெரேசியா தோட்டத்தில் கிரை பறிக்கசென்ற குடும்பஸ்தத்தர் ஒருவர் இன்று (29) காலை சடலமாக மீட்கபட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று ஞாயிற்றுகிழமை காலை 09.00 மணி அளவில் கீரை பறித்து கொண்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார்.
எனினும் நேற்று முழுவதும் அவர் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை 07.00 மணி அளவில் மாட்டுக்கு புல் அறுக்கும் புல் கான் ஒன்றில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கபட்டவர் 44 வயதுடைய மாரிமுத்து விக்னேஸ்வரன் எனவும், இரண்டு பிள்ளைகளின் தந்தையெனவும் அடையாளம் காணபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

D2