வவுனியா A9 வீதி கனகராயன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலை ஒன்று நேற்று (29.08.2016) நள்ளிரவு இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் 210 வது கிலோமீற்றர் கல்லிற்கு முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றடி உயரமான புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தை உறுதிப்படுத்திய கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











