கூரை மீதேறி புறாக்களைப் பிடிக்க முற்பட்டவர் கால் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!!

524

Dead

கிண்ணியா – குட்டிக்கராச்சி இஹ்ஸானியா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிண்ணியா – புது நகரத்தைச் சேர்ந்த 25 வயதான அப்துல் ஹஸன் இர்ஷாட் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் இஹ்ஸானியா மகளிர் மகா வித்தியாலயத்தின் கூரை மீதேறி புறாக்களைப் பிடிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கால் தவறி வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.