2015 புவி அழகு ராணியான (Miss Earth 2015) பிலிப்பைன்ஸை சேர்ந்த ஏஞ்சலியா ஒங் மற்றும் மிஸ் வோட்டர் 2015 அழகுராணியான அமெரிக்காவின் பிரிட்டனி ஆன் பெய்னே ஆகியோர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள தெரண மிஸ் ஸ்ரீலங்கா 2016 அழகு ராணி போட்டிகளில் அதிதிகளாக கலந்துகொள்வதற்காக தெரண தொலைக்காட்சியின் அழைப்பின் பேரில் அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கையில் மரம் நடும் நிகழ்விலும் ஏஞ்சலியா ஒங் மற்றும் பிரிட்டனி ஆன் பெய்னே ஆகியோர் பங்குபற்றினர்.








