பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை : சந்தேக நபர்கள் 7 பேர் கைது!!

515

Sulaiman-2

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் 7 சந்தேகபர்கள் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சடலத்தை மாவனல்லை பகுதிக்கு கொண்டு செல்ல உதவிய கூலித் தொழிலாளிகள் உட்பட எழுவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைச் செய்யப்பட்ட வர்த்தகரின் கொடுக்கல் வாங்களுடன் தொடர்புடைய அவரது சேவையாளர் ஒருவர், சகீபின் தந்தையிடம் கப்பம் பெறும் நோக்கில் இக்கொலையை செய்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.