வவுனியா கனகராயன்குளம் ஆரம்பப் பாடசாலையில் காணப்பட்ட குழவிக்கூடு கலைந்து வந்து கொண்டியதில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா கனகராயன்குளம் ஆரம்பப் பாடசாலை இரண்டாம் தவணை முடிவின் பின் நேற்று ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலைக்கு அருகே காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து வந்து அதிபர், ஆசிரியர் உட்பட ஆறு பேரை தாக்கியுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆறு பேர் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பாடசாலை அதிபர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.






