வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் 36வது நினைவு தினம்!!

1114

 
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலிருக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தூபிக்கு முன்னால் இன்று(01.09.2016) காலை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார் (கண்ணன்) தலைமையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை உபபிதா சந்திரகுலசிங்கம் (மோகன்), முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், மற்றும் சமூகசேவையாளர்கள், பொது மக்கள், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியர், மாணவர்கள், தனிநாயகம் அடிகளாரின் சிலையினை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அனிதா தொலைத் தொடர்பாக உரிமையாளர் கலந்து கொண்டதுடன் சமூக சேவைகள் உத்தியோகத்தரினால் அன்னாரின் நினைவுப் பேருரையினை வழங்கியதையடுத்து அன்னாரின் திருவருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 IMG_0013_1 IMG_0015_1 IMG_0016_1 IMG_0019_1 IMG_0021_1 IMG_0022_1 IMG_0023_1 IMG_0027_1 IMG_0030_1 IMG_0038_1 IMG_0040_1