கிளிநொச்சியில் மோட்டார் வண்டி கொள்ளையிட்ட இருவர் கைது!!

479

arrest1

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 106 000 பெறுமதியான மோட்டார் வண்டி ஒன்றை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட மோட்டார் வண்டியும் இவர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நேற்று (30) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.