கிளிநொச்சியில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

563

Kilinochchi

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து, 2 பிள்ளைகளின் தாயான 50 வயதுடைய சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், வட்டக்கச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Kilinochchi1