நல்லூருக்கு ஆண்களைப் போல் வேட்டி கட்டிவந்த பெண்!!

1815

nallor

நல்லூரில் இன்று இடம்பெற்ற தீர்த்த உற்சவத்திற்கு பெண் ஒருவர் ஆண்களைப்போல வேட்டி கட்டி வந்துள்ளமை அங்கு சென்ற பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இவ்வாறு நல்லூருக்கு வருகை தந்தவர் யாழ் மாவட்ட பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்காலத்தில் பெண்கள் ஆண்களின் உடைகளை அணிவது சகஜமான ஒன்று, ஆனால் வேட்டி அணிந்து செல்வது குறைவான சம்பவம்.

இவ்வாறிருக்க நல்லூர் ஆலயத்திற்கு ஆண்களைப் போன்று வேட்டி சட்டை அணிந்த வந்துள்ளார் இந்தப் பெண்.

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிப்பதைப் போன்று உள்ளது இந்த சம்பவம்.

இதேவேளையில் நேற்றும் கூட வெளிநாட்டு பெண் ஒருவர் இந்து கலாச்சார உடையில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 2