காட்டு யானைகளின் உயிரிழப்பை தடுக்க புதிய திட்டம்!!

495

Elephant

காட்டு யானைகளின் உயிரிழப்புபை தடுக்கும் நோக்கில் வீதிகளூடாக யானைகள் கடக்குமிடங்களில் பொலிஸ் அரண்களை அமைப்பதற்கு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக வனஜீவராசிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வேகமாக பயணிக்கும் வாகனங்களை தொடர் சோதணைகளுக்கு உட்படுத்துவதனூடாக காட்டு யானைகள் மோதி உயிரிழப்பதை குறைத்துக் கொள்ள முடியும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார் .

இவ்வாறான ஒரு சில பாதைகளே காணப்படுவதால் அது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்துதல் இலகுவானது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.