திருகோணமலை- தெவனிபியவர பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது மண்வெட்டியால் பெண் ஒருவருவரைத் தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அதனைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணே மண் வெட்டியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மஹதில்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.






