மாத்தறையிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியில் பயணம் செய்த 70 வயதான வயோதிபர் ஒருவர் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தனது அந்தரங்கத்தைக் காண்பித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை வைத்தியசாலையில் வைத்திய முகாமுக்குச் சென்று மீண்டும் கொட்டபல பிரதேசத்தை நோக்கிச் செல்ல அக்குரஸ்ஸ பஸ் வண்டியில் ஏறிய சந்தேக நபர் அருகிலிருந்த இந்த யுவதியிடம் தனது அந்தரங்கத்தை காண்பித்துள்ளார்.
அச்சமுற்ற யுவதி கூச்சலிட்டுள்ளார். பின்னர் பஸ் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து பஸ் அக்குரஸ்ஸ பஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.





