வவுனியாவில் மாபெரும் புத்தக மலிவு விற்பனைக் கண்காட்சி!!

588

Tamil

தமிழ் மாமன்றம் நடாத்தும் தமிழ் மாருதம் 2016 கலை இலக்கியப் பெருவிழாவானது வரும் சனி – ஞாயிறு தினங்களில் (செப்டெம்பர் 3,4) ஆகிய தினங்களில் வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையினர் புத்தககக் கண்காட்சியையும் மலிவு விற்பனையையும் நடாத்தவுள்ளனர்.

தமிழ் மொழி, இலக்கிய நூல்கள், நாவல்கள், கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தவுள்ளன.

நீண்டகாலத்திற்குப் பின்னர் வவுனியாவிலே நடாத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பொதுமக்கள், மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள் முறையாகப் பயன்படுத்தி, தமிழ் மாருதம் 2016 நிகழ்வுகளையும் கண்டுகளித்து விழாவைப் பூரணப்படுத்துமாறு தமிழ் மாமன்றத்தினர் அழைக்கின்றார்கள்.