பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

516


logo8

 



*சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.

*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.



*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.



*மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.


*காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

*ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால்கொடுக்கும்.


*உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

*டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும்மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

*வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும் குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

*ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.


*பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

*பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப் பாலைமட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

*கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

*கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

*ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

*சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்.

*ஹூக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கல்கட்டா நகரம்.

*நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

*ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

*நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.