வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் இன்று (02.09.2016) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தி்ல் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் வைரவப்புளியங்குளத்திலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.









