இன்று இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று கொடிகாமப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சற்று நேரத்திற்கு முன்னதாக இவ் விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல பயணிகளோடு யாழை நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து அதிகால 4:20 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் இடைப்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் இருந்த பனையுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பேரூந்தில் பயணித்த பயணிகள் 20க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரியவந்துள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சாரதி தூங்கியதால் இவ் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.