காலி – அஹங்கம பிரதேசத்தில் உணவகம் ஒன்றினுள் சட்டவிரோதமான முறையில் விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் குறித்த உணவகத்தை கடந்த 30ஆம் திகதி சுற்றிவளைத்துள்ளனர்.
இதன் போது , கிளிகள் , நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட விலங்குகள் மீட்கப்பட்டன. மேலும் , சந்தேகநபர் ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








