மும்பை அணியிலிருந்தும் லசித் மலிங்கா விலகல்!!

360

lasith_malinga

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சம்பியன்ஸ் லீக் T20 தொடரிலும் பங்குபற்ற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் லீக் T20 தொடருக்கான மும்பை இண்டியன்ஸ் குழாமில் லசித் மலிங்க இடம்பெறாத காரணத்தினாலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பரில் தனது இரண்டாவது குழந்தையை லசித் மலிங்கா எதிர்பார்க்கும் நிலையில் குழந்தை பிறக்கும் காலத்தில் தனது மனைவியுடன் இருப்பதற்கு லசித் மலிங்க விரும்புகிறார்.

இதன் காரணமாக இலங்கையின் சிம்பாப்வே தொடரிலிருந்தும், மும்பை இந்தியன்ஸ் சார்பான சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரிலிருந்தும் அவர் விடுப்புக் கோரியிருந்தார்.

சிம்பாவே தொடரில் பங்குபற்றாமல் விடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய அறிவித்திருந்தார். சம்பியன்ஸ் லீக் T20 தொடருக்கான மும்பை இண்டியன்ஸ் குழாமிலும் லசித் மலிங்க இடம்பெறவில்லை.

அண்மையில் நிறைவடைந்த கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் பின்னர் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ரிக்கி பொண்டிங்கும் இக்குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை. இக்குழாமின் தலைவராக ரோகித் சர்மா செயற்படவுள்ளார்.