வவுனியாவில் 150வது வருட பொலிஸ் பூர்த்தி நிகழ்வு!!

1267

 
“சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு’ எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 150 வது பொலிஸ் தினம் நேற்று (03-09-2016) சனிக்கிழமை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், தலைமையில் பொலிஸ் திணைக்களகத்தின் கொடி ஏற்றப்பட்டு பொலிஸ் திணைக்களகத்தின் கீதம் இசைக்கப்பட்டது.

நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.திசரகுமார, உதவிபொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாந்து, மற்றம் குற்றத்தடுப்பு அதிகாரிகள், போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 IMG_7838 IMG_7848 IMG_7851 IMG_7853 IMG_7855 IMG_7856 IMG_7860 IMG_7865 IMG_7871 IMG_7876 IMG_7879 s ss sss