சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடவிருக்கும் சச்சின், டிராவிட்!!

285

sachin

சம்பியன்ஸ் லீக் 20-20 தொடர் வருகிற 21ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு ஐ.பி.எல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

ஐ.பி.எல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டெண்டுல்கரை சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுமாறு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேட்டு இருந்தது.

இந்த நிலையில் மும்பை இண்டியன்ஸ் அணியில் டெண்டுல்கர் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதேபோல் இந்த சம்பியன்ஸ் லீக் போட்டியுடன் விடைபெறுவதாக தெரிவித்து இருந்த டிராவிட்டின் பெயர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறது. இதனால் இருவரும் இந்த போட்டியில் விளையாடுவார்கள்.