பாகிஸ்தான் -இங்கிலாந்து 5வது ஒருநாள் போட்டி. ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 வதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி இங்கிலாந்தில் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பாகிஸ்தான் அணி,ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியை தனதாக்கியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார். அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்றனர்.
பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி சொயிப் மாலிக், சர்ப்ராஸ் அஹமட் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்துடன் 48.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஆசியாவுக்கு வெளியே 300 கடந்து பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் வெற்றிப்பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் இந்த சந்தர்ப்பம் அமையப்பெற்றது.
முதல் 4 ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்று தொடரி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ் அஹமட்டும் ,தொடர் நாயகனாக இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் தேர்வாகினர்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் ஒரேயொரு T20 போட்டி இடம்பெறவுள்ளது.