கவுண்டி போட்டியில் சதமடித்த கம்பீர்!!

537

gautam-gambhir2

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டியில் போமின்றி தவித்த இந்திய வீரர் கம்பீர் சதம் அடித்து எழுச்சி கண்டார்.

மோசமான போம் காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த கம்பீர் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுண்டி போட்டியில் விளையாடுகிறார்.

இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் (இரண்டு முதல் தர போட்டி + இரண்டு ஏ பிரிவு போட்டி) ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

அதிகபட்சமாக நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கெதிரான முதல் தர போட்டியில் 31 ஓட்டங்களும், டெர்பிஷயர் அணிக்கெதிரான ஏ பிரிவு போட்டியில் 21 ஓட்டங்களும் எடுத்தார்.

சமீபத்தில் முடிந்த லன்காஷயர் அணிக்கெதிரான ஏ பிரிவு போட்டியில் வெறும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கம்பீர், பிரிஸ்டோல் நகரில் நடக்கும் கிளவ்சஸ்டர்ஷயர் அணிக்கெதிரான முதல் தர போட்டியின் முதல் இன்னிங்சில் டக்-அவுட் ஆனார்.

நேற்று நடந்த இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாட்டத்தில் எழுச்சி கண்ட கம்பீர் கவுன்டி போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தவிர இது முதல் தர போட்டியில் இவரது 34வது சதமாகும், பொறுப்பாக ஆடிய இவர் 149 பந்தில் 106 ஓட்டங்கள்(ஒரு சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார்.