தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு!!

672

D1

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவலை பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 5.30 மணியளவிலே இச்சப்பவம் இடம்பெற்றுள்ளது.

கவரவலை தோட்டத்தை சேந்த 15 வயதுடைய சசிகுமாரன் கிசாந்தினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்காலிக குடியிருப்பிலே தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் மரணம் தொடர்பிலான காரணங்கள் தெரியவில்லையென்றும் இச்சம்பவம்தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

D2