காட்டில் தவத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவருக்கு தானம் வழங்கும் காட்டு யானைக் கூட்டம் ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளதாக அறியமுடிகின்றது.
ஆன்மீகத்திற்கும் விலங்குகளுக்கும் இடையில் இருக்கும் நெருங்கிய இணைப்பை இல்லாமல் செய்து விட முடியாது என்பதை காட்டும் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்கு நடந்திருந்தாலும் இந்த பிக்குவிற்கு யானைகள் தானம் வழங்கும் இந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.