விஜயுடன் தலைவா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் ராகிணி. இவரது வசீகரமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன என்று ராகிணி சொல்கிறார்.
தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். படத்தை பார்த்து நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இப்படத்தில் நான் நடித்த நிறைய சீன்கள் நீக்கப்பட்டு உள்ளன.
படம் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. கதைக்கேற்ற கவர்ச்சி அவசியமானது. எனவே, படங்களில் கவர்ச்சியாகவும் நடிப்பேன். தமிழ், தெலுங்கு மொழிகளை கற்று வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன் என்று ராகிணி கூறினார்.