பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை : 8 பேருக்கு விளக்கமறியல்!!

1051

Sulaiman

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கொலைச் சந்தேக நபர்கள் எட்டு பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

48 மணி நேர தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் எட்டு பேரும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர்களை இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் குரித்த சந்தேக நபர்கள் தொடர்பில் அடையாள அணிவகுப்பினை நடாத்த பொலிஸார் மன்ரை கோரியுள்ள்Kஅ நிலையில் கைதனோரின் அடையாளத்தை வெளிக்கடடாது அவர்களை முழுமையாக மறைத்த நிலையில் மன்றில் ஆஜர் செய்யவும் மீள அவர்களை சிறைக்கு கொண்டு செல்லவும் நீதிவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் பயன்படுத்திய தொலைபேசியும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்ப்வம் இடம்பெறும் போது சந்தேக நபர்கள் சிலர் அணிந்திருந்த ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவையும் நீதிமன்றில் வழக்குப் பொருளாக சமர்பிக்கப்பட்டுள்ளன.

இதனைவிட ஏற்கனவே பிரதான சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய மட்டக்குளி பகுதியின் வாடகைக் கார் நிறுவனத்திலிருந்து பெறப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்ப்ட்ட டொயாடோ ரக கார் மற்றும் 8 ஆவது சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய கடுகண்னாவ பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கொலைக்கு பயன்படுத்தப்ப்ட்ட கத்தி ஆகியனவும் மன்ரில் வழக்குப் பொருளாக சமர்பிக்கப்பட்டுள்ளன.