நகை கடை திறப்பு விழாவில் நயன்தாராவை முற்றுகையிட்ட ரசிகர்கள் : திணறிய நயன்தாரா!!

342

nayan

நகை கடை திறப்பு விழாவில் நயன்தாராவை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொச்சியில் இச்சம்பவம் நடந்தது. அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடையொன்றை திறக்க நயன்தாராவை அழைத்து இருந்தனர்.

வீட்டில் இருந்து நாலைந்து கார்கள் பின் தொடர அவ்விழாவுக்கு நயன்தாரா சென்றார். நகைக்கடையை திறக்க நயன்தாரா வருகிறார் என்று ஏற்கனவே விளம்பரப்படுத்தி இருந்ததால் அவரை காண ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டு நின்றனர்.

நயன்தாரா காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் முண்டியடித்தார்கள். ஒட்டோ கிராப் வாங்கவும் நீட்டினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நயன்தாரா கூட்டத்தினர் நடுவில் சிக்கினார். இதனால் விழாக்குழுவினர் பதட்டமானார்கள். உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் விரைந்து போய் கூட்டத்தினரை விலக்கி நயன்தாராவை பத்திரமாக மீட்டனர்.

அவரை சுற்றி வளையம் அமைத்தபடி நகைக்கடைக்குள் அழைத்து சென்றனர். நகைக்கடையை திறந்து வைத்து சிறிது நேரம் நயன்தாரா சுற்றி பார்த்தார். பிறகு பாதுகாவலர்கள் துணையோடு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

நயன்தாரா ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களில் அதிகம் பங்கேற்பது இல்லை. அதிக பணம் தருவதாக ஆசை காட்டியும் மறுத்து வந்தார். கொச்சி நகை கடையை மட்டும் திறந்து வைக்க சம்மதித்தார்.