சிரியாவில் தொடர் தற்கொலை தாக்குதல் : 43 பேர் பலி!!

546

Sriya

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கடற்கரை நகரமான டார்டஸ்சில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அந்த நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி சென்று வெடிக்க செய்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் குண்டு வெடிப்பில் சிக்கி தீக்கிரையாகின.

இதனால் சம்பவ இடத்திலேயே பலர் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதியில் ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மற்றொரு கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

அடுத்தடுத்து நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் சிக்கி 33 பேர் உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போல் ஹோம்ஸ் நகரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை கட்டிடம் ஒன்றின் மீது மோதி வெடிக்க செய்தனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஹசாக்கஸ் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 6 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.