யாழ் காங்கேசன்துறையிலிருந்து மொறட்டுவை நோக்கி நேற்று (06.09.2016) இரவு புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான பேருந்தொன்றில் வவுனியா இளைஞனான அன்ரனி ரெக்சன் (26) பயணித்துக்கொண்டிருந்த வேளையில் பளை பிரதேசத்தை அண்மிக்கும் வேளையில் மற்றுமொரு தனியார் பேருந்தொன்றுடன் போட்டிக்கு அதிவேகமாக பயணிப்பதை அவதானித்த இளைஞன் அப்பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் வாய்த்தர்கத்தில் ஈடுபட்டவேளை இந்த பேருந்தை குறுக்கிட்ட மற்றைய பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட இவ் இளைஞனை இரும்புக் கம்பியினாலும் கூறிய ஆயுதத்தினாலும் தாக்கிவிட்டு தப்பித்துள்ளனர்
அத்துடன் சுதாகரித்துக்கொண்ட இளைஞனின் நண்பர்கள் வவுனியாவில் வைத்து குறித்த பேருந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வைத்து பொலிஸாரின் உதவியுடன் வழிமறித்து இளைஞனை தாக்கிய சாரதி மற்றும் நடத்துனரை உடனடியாக கைதுசெய்ததுடன் அவர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள் மற்றும் கூறிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞன் வவுனியா பொதுவைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


















