உள்குத்துக்காக மீன் விற்ற தினேஷ், துணி விற்ற நந்திதா!!

1025

Dinesh

திருடன் பொலிஸ் படத்தை இயக்­கிய கார்த்திக் ராஜு இயக்­கி­யுள்ள படம் உள்­குத்து. இதில் அட்டக்கத்தி தினேஷ், நந்­திதா, ஸ்வேதா, சாயாசிங், பால சர­வணன், ஸ்ரீமன் நடித்­துள்­ளனர்.

ஜஸ்டின் பிர­பா­கரன் இசை­ய­மைத்­துள்ளார்.இந்தப் படம் நாகர்­கோவில், முட்டம் பகு­தியில் நடக்­கிற கதை. ஒரே ஷெட்­யூலில் படத்தைமுடித்து திரும்­பி­யி­ருக்­கி­றார்கள். இதன் பாடல் வெளி­யீட்டு விழா கடந்­த­வாரம் நடை­பெற்­றது.

படத்தை பற்றி இயக்­குநர் கார்த்திக் ராஜு கூறி­ய­தா­வது:வெளி உல­கத்தில் சாதா­ரண மீன் வியாபாரியாக இருக்கும் ஹீரோ மறை­வாக சில வேலை­களை செய்வார்.

அதற்­குத்தான் படத்­திற்கு ‘உள்­குத்து’ என்று பெயர் வைத்­தி­ருக்­கிறோம். மீன் வியா­பாரி கரக்டர் என்பதால் தினேஷை நிஜ­மா­கவே ஒரு மீன் கடையில் மீன் வியா­பாரம் செய்ய பயிற்சி எடுக்க வைத்தோம்.

மீன் வெட்­டு­வது தனி டெக்னிக் தவ­றினால் கையை வெட்டிக் கொள்வோம். அதனால் அவர் பயிற்சி எடுத்து நடித்தார். சண்டை காட்­சி­யில நிறைய அடி­வாங்கி வலி­யு­டன்தான் நடித்தார். படத்தில் 12 சண்டை காட்­சிகள் இருக்­கி­றது.

நந்­திதா ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் பெண்­ணாக நடிக்­கிறார். வாடிக்­கை­யா­ளர்க ளிடம் முகம் சுழிக்­காமல் சிரித்துக் கொண்டே செய்ய வேண்­டிய வேலை அதற்கும் அவ­ருக்கு பயிற்சி கொடுத்தோம்.

நாகர்­கோ­விலில் ஒரு ஜவுளி கடையில் நந்­தி­தாவை நிஜ­மா­கவே ஜவுளி விற்க வைத்து அதை மறைந்­தி­ருந்து பட­மாக்­கினோம். முதலில் அவ­ரிடம் பேரம் பேசி துணி வாங்­கி­ய­வர்கள் அதன்­பி­ற­குதான் அவர் நடிகை நந்­திதா என்­ப­தையே கண்டுபிடித்தார்கள். அந்த அளவிற்கு அவர் தோற்றமும் நடிப்பும் யதார்த்தமாக இருந்தது என்றார்.