வவுனியா தட்டான்குளம் குளத்துநீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் குத்தகைதாரர்கள் : மக்கள் பாதிப்பு!!

696

 
செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமான தட்டான்குளம் பகுதியில் அமைந்திருக்கும் தட்டான்குளம் என அழைக்கப்படும் குளம் சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.

அக் குத்தகைதாரர்கள் குளத்து நீரை வெளியேற்றி மீன்களை பிடித்துவருவதால்
அக்கிராமக் கிணறுகள் வற்றி வருவதோடு ஆடு மாடு போன்ற கால்நடைகள்
நீரின்றி அவதிக்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாகக்கொண்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒருசிலர் இலாபத்திற்காக குளத்து நீரை வெளியேற்றி பாதிப்படைய வைத்தமை மக்களிடயே பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

14218337_1353999597963094_953168849_n 14218610_1353999844629736_1633971380_n 14256667_1353999701296417_698693460_n 14269720_1353999427963111_1980961194_n 14269731_1353999457963108_618486709_n