செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமான தட்டான்குளம் பகுதியில் அமைந்திருக்கும் தட்டான்குளம் என அழைக்கப்படும் குளம் சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.
அக் குத்தகைதாரர்கள் குளத்து நீரை வெளியேற்றி மீன்களை பிடித்துவருவதால்
அக்கிராமக் கிணறுகள் வற்றி வருவதோடு ஆடு மாடு போன்ற கால்நடைகள்
நீரின்றி அவதிக்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாகக்கொண்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒருசிலர் இலாபத்திற்காக குளத்து நீரை வெளியேற்றி பாதிப்படைய வைத்தமை மக்களிடயே பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது.










