குழந்தையா பொம்மையா? குழப்பத்தில் முதியவர் செய்த செயல் : செய்துசெய்த பொலிசார்!!

405

Baby

இங்கிலாந்தில் பொம்மை என நினைத்து குழந்தையின் முகத்தில் குத்துவிட்ட முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Baguley நகரை சேர்ந்த Amy Duckers என்ற பெண், பிறந்து சில வாரங்களே ஆன தனது குழந்தையை தூக்கிகொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த 63 வயது முதியவர், தாயின் கையில் இருந்த குழந்தையை நன்றாக பார்த்துள்ளார். அதன்பின்னர் அதனை பொம்மை என நினைத்து அதன் அருகில் சென்று முகத்தில் ஒரு குத்து விட்டுள்ளார்.

முதியவரின் இந்த எதிர்பாராத செயலால் அதிர்ச்சியடைந்த தாயார், குழந்தைக்கு முதலுதவி அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் இதுகுறித்து பொலிசிலும் புகார் அளித்ததையடுத்து, சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற பொலிசார், குழந்தையை தாக்கிய குற்றத்திற்காக முதியவரை கைது செய்துள்ளனர். தான் பொம்மை என நினைத்து தவறுதலாக குழந்தையை தாக்கிவிட்டேன் என முதியவர் கூறியபோதும், இதனை ஏற்க மறுத்த பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் கூறியதாவது, எனது குழந்தை Elsie Rose பிறக்கும்போது 2.72 கிலோ கிராம் எடையுடன், உடல்நலக்குறைவோடு தான் பிறந்தாள். அவளது தோற்றம் பார்ப்பதற்கு பொம்மை போன்று இருப்பதன் காரணத்தால் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சம் உள்ளது என கூறியுள்ளார்.