கண்டியில் கிராம சேவை பிரிவு ஒன்றைக் காணவில்லை!!

356

Elections-Commissioner-Mahinda-Deshapriya

புதிய எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் கண்டியில் கிராம சேவை பிரிவு ஒன்றைக் காணவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிராம சேவை பிரிவு ஒன்று காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்தப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது, பின்னர் அசோக பீரிஸ் தலைமையில் நடத்தப்பட்ட எல்லை நிர்ணய நடவடிக்கைகளின் போது கிராம சேவை பிரிவு காணாமல் போயுள்ளது.

தேர்தல் நடத்தப்படாமையுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.

கிராம சேவை பிரிவு ஒன்று காணாமல் போன விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.