வவுனியாவில் மக்கள் அமைதி ஊர்வலம்!!

691

 
வவுனியாவில் இன்று(07.09.2016) காலை பத்தினியார்குளம் கமக்கார அமைப்புக்கள், விவசாயிகள் இணைந்து பேராறு குடிநீர் விநியோகத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு உறுதியளிக்கப்பட்ட வயல் காணிகளை வழங்கக்கோரி வவுனியா பிரதேச செயலகத்திலிருந்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு பேரணியாகச் சென்று வவுனியா அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கை மகஜரினை கையளித்தனர்.

இத் திட்டத்திற்கு 167 ஏக்கர் வயல்க் காணி சுவீகரிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தினால் கடந்த 2013ம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட நிலையில் தமக்கு மாற்று வயல் காணிகள் ஒருவருடத்திற்குள் வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டதுடன், கமக்கார அமைப்புடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

எனினும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து கமக்கார அமைப்பு, விவசாயிகள் இணைந்து மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், தமது கோரிக்கை மனுவினையும் கையளித்தனர்.

மனுவினைப் பெற்றுக் கொண்ட அரச அதிபர் இன்று மாலைக்குள் கமக்கார அமைப்பின் கோரிக்கைக்கு பதில் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.

இப்பேரணியில் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1 DSC_0018 DSC_0019 DSC_0021 DSC_0023 DSC_0024 DSC_0025 DSC_0026 DSC_0029 DSC_0032 DSC_0035 DSC_0036 DSC_0038 DSC_0040 DSC_0042 DSC_0044 DSC_0046 DSC_0049