திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் மரக்கறிக்கு நீர்பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து ஆணொருவர் இன்று பகல் 1.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய வீரய்யா செல்வமணி என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இன்று காலையில் தோட்ட வேலைக்கு சென்று பகல் வரை வீட்டுக்கு வராமல் இருந்ததால் பகலுணவிற்காக இவரை தேடிச்சென்ற வேளையிலேயே கிணற்றில் விழுந்து கிடந்ததை கண்டுள்ளனர்.








